Wednesday, 20 May 2009

யாழ்தேவி எனும் பெயரில் உண்மையில் இலங்கைப்பதிவுகள் திரட்டப்படுகிறதா ?

யாழ்தேவி எனும் பெயரில் அண்மையில் இலங்கைப்பதிவர்களது பதிவுகள் திரட்டப்படுவதாக FaceBook இல் நண்பனொருவன் எங்கோ இட்டிருந்த தொடுப்பின்மூலமாக சென்று பார்த்தேன். நல்ல விடையம் போல் தோன்றியது. இலங்கைப்பதிவர்கள் அதில் இணைந்திருப்பதாக காட்டப்பட்டிருந்தது. நல்ல விடையமாகவும் தென்பட்டது (எனது பதிவு இணைக்கப்படவில்லை) .

ஆனால் சற்றுக்காலமாகவே அங்கு காணப்படும் திரட்டப்படும் வலைப்பதிவுகளின் செய்திகள் தமிழ்போராட்டங்களுக்கு எதிராகவும், புலம்பெயர்ந்து வாழும் எம் இரத்தங்களின் போராட்டங்களினைக் கொச்சைப்படுத்தும்விதமாகவும் வருகின்றன. இங்கே இவற்றையெல்லாம் வலைப்பதிவுகளில் எழுதுவது மற்றும் அதை யாழ்தேவி திரட்டியில் பிரசுரிப்பது அனைத்தும் கொடூர அரசின் கைக்கூலிகளே எனத்தெரிகிறது.

இங்கு நான் யாழ்தேவி வலைப்பதிவு திரட்டி நிர்வாகத்தினரிடம் கேட்கவிரும்புவது .....
  1. நீங்கள் வலைப்பதிவுகளை இணைக்கும் போது வலைப்பதிவர்களிடம் அனுமதி பெற்றா இணைத்தீர்கள்.
  2. இவ்வாறானவர்களின் வலைப்பதிவுகளின் பதிவுகள் ஏன் உலக தமிழ்வலைப்பூதிரட்டிகளில் திரட்டப்படாமல் யாழ்தேவியில் மட்டும் திரட்டப்படுகிறது, ஏதாவது . . . .
  3. திரட்டியை நிர்வகிப்பவர்கள் உண்மைத்தண்மையில்லாத செய்திகளை வெளியிடும் வலைப்பதிவுகளை தணிக்கை செய்யலாமே ( அதற்க்கு உரிமை உங்களுக்கு உண்டு)